அனுராதபுர சிறை சம்பவம்! இருவர் பலி!!!

அநுராதபுரம் சிறைச்சாலை ஏற்பட்ட குழப்பகரமான நிலைமையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் கைதி ஒருவர் தொடர்பில், ஏனைய கைதிகள் குழப்பமடைந்ததால் அநுராதபுரம் சிறையில் பதற்றநிலை ஏற்பட்டது. இந்நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.